வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

போர் விமானங்களில் விமானிகளாக பயிற்சி பெற்று வரும் 3 பெண் விமானிகளுக்கு கருத்தரிக்க தடை

புதுடெல்லி,

இந்திய போர் விமானங்களில் விமானிகளாக பயிற்சி பெற்று வரும் 3 பெண் விமானிகளுக்கு 4 வருடங்களுக்கு கருத்தரிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் விமானிகளுக்கு ஐதாராபாத்தில் உள்ள ஹக்கிம்பேட் விமானப்படை மையத்தில் பயிற்சி அளிக்கபட்டு வருகிறது.

முதல் கட்ட பயிற்சி முடிந்து தற்போது 2-வது கட்ட பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 2-வது கட்ட பயிற்சி முறைதான் மிகவும் முக்கியமானது. இந்த பயிற்சி முறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். அப்போது தான் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இது குறித்து இந்திய விமானத்படையின் துணை ஏர் வைஸ் அட்மிரல் என்.கே. தாண்டன் கூறியிருப்பதாவது:

போர் விமானத்தில் பைலட்டுகளாக பறக்க கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தொடர்ச்சியான பயிற்சி தேவைப்படுகிறது. பெண் விமானிகளின் பயிற்சி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இது எல்லா நாட்டு விமானப்படையிலும் நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

பவனா காந்த், மோகனா சிங், அவானி சதுர்வேதி என்ற  3 விமானப்படை வீராங்கனைகளும் போர் விமானத்தில் பைலட்டுகளாக பணிபுரிய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்ட பயிற்சி முடிந்த பின், கர்நாடாகா மாநிலம் பிதாரில் 3வது கட்ட பயிற்சி ஒரு வருட  காலம் அளிக்கப்படும். இதில் பிரிட்டிஷ் ஹாக் ரக என்ற போர் ரகவிமானங்களில் பயிற்சி  பெறுவார்கள். அதனை தொடர்ந்து  சூப்பர்சானிக் போர் விமானங்களில் பைலட்டுகளாக பறக்க அனுமதிக்கப்படுவார்கள். 

No comments:

Post a Comment