வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

உணவு‌க்கு உ‌ண்டு பல பழமொ‌ழிக‌ள்!

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.

உ‌ப்‌பி‌ல்லாத ப‌ண்ட‌ம் கு‌ப்பை‌யிலே.

உ‌ண்ட ‌வீ‌ட்டு‌க்கு ரெ‌ண்டக‌ம் செ‌ய்யாதே.

உ‌ண்டி சுரு‌ங்‌கி‌ன் பெ‌ண்டிரு‌க்கு அழகு.

கட்டுச் சோற்றில் எலியை வைத்துக் கட்டினதுபோல. 

பசித்தவன் பழைய கணக்கைப் புரட்டிப் பார்த்தானாம்.

கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையைத் திணித்தானாம்.

ஆறின கஞ்சி பழங்கஞ்சிதான்.

பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது.

உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் ஆவார்.

தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கொடுக்காதவன்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

எச்சில் கையால் காக்கா விரட்டாதவன்.

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்கக் கூடாதா?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

நொறுங்கத் தின்றால் நூறு வயசு.

கூழானாலும் குளித்துக் குடி.

சுண்டைக் காயில் கடிக்கிறது பாதி, வைக்கிறது பாதியா?

நன்றி: வெப்துனியா

No comments:

Post a Comment