உண்டேன்! உண்டேன்! உண்டேன்!
ஒலி வடிவில் கேட்க இயலாதோருக்காக உரை வடிவில் கீழே:
ஔவையார் ஒரு சமயம் மதுரையிலே பாண்டியனுடைய அரண்மனைக்கு திருமணத்துக்கு போனார்.
அங்க இருக்குற காவல்காரர்கள் எல்லாம் விவேகம் இல்லாதவர்கள். ஔவையாரை, பழுத்த ஞானக் கிழவியை, உள்ளே அனுமதிக்கவில்லை.
"போ வெளியே! கெழவிகளுக்கெல்லாம் இங்கே என்ன வேலை!"
அவர் தமிழ் பழம்! ஔவையார் ஒன்னும் சொல்லலை. "நல்லது"ன்னார்.
மாலை நேரத்திலே புலவர்களெல்லாம் ஔவையாரைக் கண்டு "அம்மா! பாண்டியர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போனியே சாப்பாடெல்லாம் எப்படி இருந்தது?"
"வடை, பாயசம், லாடு, ஜாங்கிரி, குலோப்ஜான், ரொம்ப உயர்வாய் இருந்திருக்கனுமே?"
"நீங்கதானே எங்களுக்கெல்லாம் தலைமை! தமிழ்த் தாய்!" என்று புலவர்கள் கேட்டார்கள்.
ஔவையார் சொன்னார் "உண்டேன்! உண்டேன்! உண்டேன்!"
என்னா உண்ட?
(பாடல்)
"புலவர்களே, பாண்டியராஜா தமிழ் மன்னரு, தமிழ் புலவர்களை ஆதரிக்கின்றவரு, செந்தமிழ் நாட்டுச் செம்மல்! அவர் வீட்டுக் கல்யாணத்துலே நான் எப்படி உண்டேன்?"
(பாடல்)
"மூன்று உண்டேன் ஒன்றே ஒன்று உண்டிலேன்"ன்னாரு.
"நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள் பசியினாலே சுருக்குண்டேன், சோறுண்டிலேன்!"
புலவர்களெல்லாம் சிரித்துக் கொண்டார்கள்."ஔவையாருக்கே இந்த கதியா"ன்னு
No comments:
Post a Comment