புதிய ஆன்டிபயாடிக் கண்டுபிடிப்பு: அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்
இந்த புதிய கண்டுபிடிப்பானது மருத்துவ உலகின் மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் அதிகமான புதுரக ஆன்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது. 1950களிலும் 1960களிலும் பல ஆன்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை எந்த புதிய ஆன்டிபயாடிக் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவ பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.
இதன் விளைவாக கடந்த முப்பது ஆண்டுகளில் நோயை தோற்றுவிக்கும் நுண்ணுயிரிகள் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு தப்பி உயிர்வாழும் வகையில் தம்மை பெருமளவு தகவலமைத்துக் கொள்ள துவங்கிவிட்டன. உதாரணமாக மருந்துகளால் குணப்படுத்த முடியாத எலும்புறுக்கி நோய் இன்று ஏறக்குறைய இருக்கும் எந்த மருந்துக்கும் கட்டுப்பாடாததொரு நிலையை எட்டியிருக்கிறது.
மீண்டும் மண்ணில் இருந்து ஆய்வு துவங்கியது:
மீண்டும் மண்ணில் இருந்து ஆய்வு துவங்கியது:
இதன் விளைவாக எல்லாவிதமான ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கும் மூலாதாரமான மண்ணில் இருந்து புது ரக ஆன்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மசெஷூசெட்சின் போஸ்டனில் இருக்கும் நார்த் ஈஸ்டர்கள் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இறங்கினார்கள். மண்ணில் ஏராளமான நூண்ணுயிரிகள் இருந்தாலும் அவற்றில் ஒரே ஒரு சதவீதத்தைத்தான் ஆய்வகத்தில் வளர்க்கமுடியும். எனவே நுண்ணுயிரிகள் இயற்கையாக வாழும் மண்ணையே ஆய்வகமாக இந்த ஆய்வாளர்கள் மாற்றிக் கொண்டார்கள்.
இந்த ஆய்வின் முதல்கட்டமாக பாக்டீரியாக்களுக்கான நிலத்தடி விடுதி ஒன்றை இந்த ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள்.
இந்த ஆய்வின் முதல்கட்டமாக பாக்டீரியாக்களுக்கான நிலத்தடி விடுதி ஒன்றை இந்த ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள்.
இந்த நிலத்தடி பாக்டீரியா விடுதியில் ஒவ்வொரு அறையிலும் ஒரே ஒரு பாக்டீரியத்தை வைத்து, அந்த ஒட்டுமொத்த உபகரணத்தையும் மண்ணுக்குள் புதைத்துவிட்டனர். இந்த உபகரணம் வடிவமைக்கப்பட்ட விதம் காரணமாக இந்த பாக்டீரியாக்கள் வைக்கப்பட்ட அறைகள் எல்லாவற்றிலும் மண் உள்ளே புகுந்தது. ஆனால் பாக்டீரியாக்களோ தனித்தனியாக பிரிந்தே இருந்தன. சில நாட்களுக்குப்பிறகு இந்த பாக்டீரியாக்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மண் தோண்டியெடுத்து ஆராயப்பட்டது.
அதில் ஒரு குறிப்பிட்ட ஆய்வாளரின் தோட்ட மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பாக்டீரியத்துக்கு அந்த மண்ணில் இருந்து நுண்ணுயிரிகள் உருவாக்கிய எதிர்வினை/ தடுப்பு வேதிப்பொருட்களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டனர். இவற்றை பரிசோதனை செய்தபோது அதில் ஆன்டிபயாடிக் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
No comments:
Post a Comment