வாரியாரின் நம்பிக்கை
அவரின் சொற்பொழிவை ரசிக்காத, புகழாத பெருமக்கள் இருக்கவே முடியாது ..
குறிப்பு வைத்துக் கொள்ளாமலேயே பல மணி நேரம் பேசும் பெருமை மிக்கவர் அவர்!
லட்சக் கணக்கான பாடல்கள் அவருக்கு மனப்பாடம்.
தினம் ஒரு சொற்பொழிவு நடத்தியச் செம்மல் அவர்!
அத்தகு ஆன்மீகப் பெரியார் வாழ்வில் நடந்த ஒரு நம்பிக்கை மிகு சம்பவம்..
வாரியார் சுவாமிகள் தன் சிறு வயதில் வீணை கற்றுக் கொள்ள தன் மாமா வீட்டிற்குச் சென்று இருந்தார். அவரது ஒரு காலில் கண்ணாடி குத்தி பெருத்த சேதத்தை உண்டு பண்ணி விட்டது. புண் பழுத்துப் போய் காலையே எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆனார். மருத்துவர், வாரியார் சுவாமிகளிடம் "காலை எடுத்து விடுவதே நல்லது.. ரூ 1000( அ) ரூ 2000 ஆகும், நான் வேண்டுமானால் ரூ 500 க்கு எடுத்து விடுகிறேன்" என்றார்.
வீட்டுக்கு வந்த வாரியார் சுவாமிகள் யோசிக்கலானார், " ஒரு காலை எடுப்பதற்கு இந்த மருத்துவருக்கே ரூ 500 கொடுக்க வேண்டும் என்றால் , இரண்டு கால்களை தந்த அந்த வேலை உடையோனுக்கு நான் எவ்வளவு கொடுக்க வேண்டும் " என்று நினைத்து , காலை , மாலை என்று இருவேளைகளில் 1000 முறை 41 நாட்கள் சிந்தாரிப்பேட்டை முருகன் கோயில் பிரகாரத்தை வலம் வந்தார்.
புண் இருந்த அடையாளமே காலில் இல்லாமல் போனது.
கிருபானந்தவாரியாரின் நம்பிக்கை எந்த அளவிற்கு அவருக்கு பெருமை சேர்த்துள்ளது பாருங்கள்
No comments:
Post a Comment