
-
–
இதில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன,
மழைக் காலங்களில் எளிதில் நோய்த் தொற்றிவிடும்
என்பதால் தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கொய்யா பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே
சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.
* இந்த பழம் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும்
ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல்,
இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை
வலுப்பெறும்.
* இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து
உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
* கொய்யா பழத்தில் உள்ள லைகோபைன் மற்றும்
கரோட்டினாய்டுகள் புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தும்
தன்மை கொண்டவை.
* இப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால்,
இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
* கொய்யா பழத்தை தோல் நீக்கி சாப்பிடுவதை விட,
தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டும், இது முகத்திற்கு
பொலிவை தருவதுடன் தோல் வறட்சியையும் நீக்கும்.
முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.
முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத்
தருகிறது.
கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை
ஆற்றிவிடுகிறது.
புகைப்பழக்கம் உடையவர்களின் நுரையீரல் மிகவும்
பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச்
சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு
பெறலாம்.
இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம்
போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது.
(இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம்
அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும்
என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை
அடைப்புகளைப் போக்கலாம்.
கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.
மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம்
சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அகன்றுவிடும்.
அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம்
இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான
நோய்களுக்குத் தீர்வு தருகிறது.
* இப்பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது, அதேபோன்று
வாதநோய் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடாமல்
தவிர்ப்பது நலம்.
–
No comments:
Post a Comment