வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

பழந்தமிழரின் அளவை முறைகள்...!

முகத்தல் அளவைகள்
ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.

ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.

ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.

ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.

ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.

ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.

ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.

ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.

ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.

ஐந்து சோடு = ஒரு அழாக்கு.இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.

இரண்டு உழக்கு = ஒரு உரி.

இரண்டு உரி = ஒரு நாழி.

எட்டு நாழி = ஒரு குறுணி.

இரண்டு குறுணி = ஒரு பதக்கு.

இரண்டு பதக்கு = ஒரு தூணி.

மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.

முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.

பத்து விராகன் எடை = ஒரு பலம்.இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்துஎடை.ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.

மூன்று தோலா = ஒரு பலம்.

எட்டு பலம் = ஒரு சேர்.

நாற்பது பலம் = ஒரு வீசை.

ஐம்பது பலம் = ஒரு தூக்கு.

இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.

ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.

ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.

ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.ஒரு விராகன் = நான்கு கிராம்.

கால அளவுகள்இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.

இரெண்டரை நாழிகை = ஒரு மணி.

மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.

அறுபது நாழிகை = ஒரு நாள்.ஏழரை நாழிகை = ஒரு சாமம்.ஒரு சாமம் = மூன்று மணி.

எட்டு சாமம் = ஒரு நாள்.நான்கு சாமம் = ஒரு பொழுது.

ரெண்டு பொழுது = ஒரு நாள்.பதினைந்து நாள் = ஒரு பக்கம்.

ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.ஆறு மாதம் = ஒரு அயனம்.

ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.

அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை...

எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும்இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றிசித்தர்கள் இராச்சியம

No comments:

Post a Comment